கேரள மக்களின் உண்மையான தலைவர்.! வீடியோ வெளியிட்டு ராகுல் காந்தி உருக்கம்.!

கேரளா: மறைந்த கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவருமான உம்மன் சாண்டியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உம்மன்

Congress Rahul Gandhi

கேரளா:மறைந்த கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவருமான உம்மன் சாண்டியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உம்மன் சாண்டி, கேரள மாநிலத்தின் முதல்வராக 2004 – 2006 மற்றும் 2011 – 2016 ஆகிய ஆண்டுகளில் பொறுப்பில் இருந்துள்ளார். மேலும்,  கேரளாவில், புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியின் நிரந்தர எம்எல்ஏ போலவே செயலாற்றியவர். 1970 முதல் 2023 வரையில் புதுப்பள்ளி எம்எல்ஏவாக இருந்துள்ளார் உம்மன் சாண்டி.

காங்கிரஸ் கட்சின் மூத்த தலைவரான உம்மன் சாண்டி கடந்தாண்டு (2023) ஜூலை 18ஆம் தேதி வயது முதிர்வு உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் இயற்கை எய்தினார். உம்மன் சாண்டியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஓர் வீடீயோவை பதிவிட்டுள்ளார்.

அதில், மக்களின் உண்மையான தலைவரான உம்மன் சாண்டி அவர்கள் தனது வாழ்நாளை கேரள மக்களின் சேவைக்காக தளராத அர்ப்பணிப்புடன் செலவிட்டார்.

அவரது பயணமும் இந்திய தேசிய காங்கிரஸின் மரபும் பின்னிப் பிணைந்துள்ளது. ஒரு மக்கள் பிரதிநிதியாகவும், அமைச்சராகவும், முதலமைச்சராகவும், ஒரு ஜனநாயகத்தின் மாண்பை உள்ளடக்கி, பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கியம் உள்ளவர்களுக்கு சேவை செய்வதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவரது வாழ்க்கை தொலைநோக்கு, அர்ப்பணிப்பு மற்றும் அக்கறையுடன் தலைமைத்துவத்திற்கு ஒரு நற்சான்றாக நிற்கிறது. உம்மன் சாண்டி அவர்களின் நினைவு நாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை ஒரு இரக்கமுள்ள, பணிவான, அர்ப்பணிப்புள்ள மக்கள் தலைவராகக் கொண்டாட வேண்டிய கேரள வரலாற்றில் அழிக்க முடியாத ஓர் பகுதியாகும் என ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node