கொரோனா.! தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் உரிமம் ரத்து.!

Default Image

கொரோனா வைரஸால் கோவாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவா மாநில சுகாதாரத்துறை மந்திரி விஸ்வாஜித் கூறுகையில் , அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் வாகனங்கள் தவிர அனைத்து அரசு போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலம் வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். திருமணவிழா போன்ற நிகழ்ச்சிகள் அடுத்த அறிவிப்பு வரும்வரை தடை செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு  சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் பின்னர் சிகிச்சை அளிக்க மறுத்தால் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படும் என  கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்