கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார்க்கு கொரோனா.!

கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார் மற்றும் அவரது மனைவியும் கொரோனா சோதனை மேற்கொண்டனர் அதில், அறிகுறியில்லா கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் சிவராம் ஹெப்பார். அதில், நானும் என் மனைவியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம் சோதனை முடிவில் அறிகுறியில்லா கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிகுறிகள் எதுவும் இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க முடிவு செய்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறோம் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.