கர்நாடகா மாநிலத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,530 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,530 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 322 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 4456 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
unknown nodeஇந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,43,091 ஆக அதிகரித்துள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,80,013ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மருத்துவமனையில் 1,53,178 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900 ஆக அதிகரித்துள்ளது.