மணிப்பூர் மாநிலத்தில் ஆகஸ்ட் -15 வரை ஊரடங்கு.!

மணிப்பூரில் மாநிலத்தில் ஆகஸ்ட் -15 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மாநிலத்தில் ஆகஸ்ட் -15 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கொரோனா வைரஸ்தொற்று அதிகரித்து வருவதற்கும்  நிலையில் சமூக பரவல் ஏற்கனவே மாநிலத்தில் நடைமுறையில் உள்ளதா என்ற சர்ச்சையுக்கும் இடையே  நேற்று அம்மாநில தலைநகர் இம்பாலில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மணிப்பூர் அரசு நேற்று வடகிழக்கு மாநிலத்தில் ஊரடங்கை  ஆகஸ்ட் -15 வரை நீட்டித்தது.

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு  போது, அத்தியாவசிய பொருட்களின் வீட்டு விநியோகம் அனுமதிக்கப்படும். கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை திறக்கப்படலாம். இதற்கிடையில், மொத்த கடைகள் ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை திறக்கப்படலாம்.

மருத்துவ அவசரநிலைக்கு பதிலளிக்கும் வாகனங்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வோர் மட்டுமே சாலைகளில் செல்ல அனுமதிக்கப்படும். சுகாதார தொடர்பான நிறுவனங்கள், அத்தியாவசிய சேவை வழங்குநர்கள், லாரி பழுதுபார்க்கும் கடைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள தபாக்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  வங்கிகள் 30% பணியாளர்கள் கொண்டு செயல்பட அனுமதி  மற்றும் ஏடிஎம்கள் செயல்படும்.