டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?
குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு பெண், நீச்சல் குளத்தில் மூழ்கியதால் உடல்நிலை மோசமடைந்து மேதாந்தா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் அவர் அரை மயக்க நிலையில் இருந்தார்.
அதனை தொடர்ந்து ஏப்ரல் 6 அன்று, அவர் மருத்துவமனை ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு (டிஜிட்டல் ரேப்) உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் அதிர்ச்சியான சம்பவத்தின்போது அறையில் இரண்டு செவிலியர்கள் இருந்ததாகவும், அவர்கள் தடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், ஏப்ரல் 13 அன்று மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், தனது கணவரிடம் இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்து, ஏப்ரல் 14 அன்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் 800-க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளை ஆய்வு செய்து, 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதன் விளைவாக, மருத்துவமனையின் ICU உபகரண தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய 25 வயது தீபக் குமார் கைது செய்யப்பட்டார்.
அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 64(2) மற்றும் 68-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையின் மறுப்பு மற்றும் விசாரணை மேதாந்தா மருத்துவமனை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. தீபக் விரல்களால் சம்மதமின்றி ஊடுருவி ‘டிஜிட்டல் கற்பழிப்பு’ செய்ததாகவும் The Indian Express, The Times of India, Hindustan Times, The Economic Time ஆகிய செய்தி நிறுவனங்கள்
தகவல்கள் தெரிவிக்கிறார்கள்.
டிஜிட்டல் ரேப் என்றால் என்ன? : என்பது பாலியல் வன்கொடுமையின் ஒரு வகையாகும், இதில் விரல்கள் அல்லது கைகளைப் பயன்படுத்தி ஒருவரின் உடலில் அனுமதியின்றி ஊடுருவுதல் நடைபெறுகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் (IPC Section 375), இது பாலியல் வன்கொடுமை (rape) குற்றமாகக் கருதப்படுகிறது. இந்தக் குற்றம் பாதிக்கப்பட்டவருக்கு உடல் மற்றும் மன ரீதியாக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்குகிறது.
மேலும், விமான பணிப்பெண்ணுக்கு நடந்த இந்த சம்பவத்தில் மருத்துவமனை நிர்வாகம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சம்பவம் தொடர்பான CCTV காட்சிகளை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவம் மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் மருத்துவமனைகளில், குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில், பெண்களின் பாதுகாப்பு குறித்து பரவலான கவலைகளைத் தூண்டியுள்ளது. ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது இதுபோன்ற குற்றம் நடப்பது சமூகத்தில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று பலர் வலியுறுத்துகின்றனர். தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள்.