விவசாயி தலையில் முளைத்த 4 இன்ச் அளவு கொம்பு! வெற்றிகரமாக வெட்டி வீசிய டாக்டர் விஷால்!

மத்திய பிரதேச மாநிலம், சாகர் எனும் மாவட்டத்தில் ராஹலி எனும் கிராமத்தைச் சேர்ந்த சியாம் லால் யாதவ். இவர் தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அதனை சின்ன காயம் என்று நினைத்து கவனிக்காமல் விட்டுவிட்டார். அது நாளடைவில் கட்டியாக வளர்ந்துள்ளது. அதனை முடிவெட்டுபவர் வெட்டியுள்ளார். பின்னர் மீண்டும் பெரிதாக வளர அதனை மீண்டும் வெட்டியுள்ளார்.
இதனால், அந்த கட்டி நான்கு இன்ச் அளவிற்கு தலையில் கொம்பு வைத்தது போல வளர்ந்து விட்டது. இதனை கண்ட கிராமவாசிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இந்த கட்டியை அகற்ற அவர் மருத்துவமனை மருத்துவமனையாக தேடி அலைந்துள்ளார். அவர் சென்ற மருத்துவமனைகளில் இதனை அகற்ற மறுத்துள்ளனர். பிறகு தனது நண்பரின் ஆலோசனைக்கு இணங்க, போபாலில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கு அவரை பரிசோதித்த பின்னர், டாக்டர் விஷால் விஷால் தலைமையிலான மருத்துவ குழு வெற்றிகரமாக இந்த கட்டியை அகற்றி உள்ளனர். தற்போது தான் அந்த விவசாயிக்கு தலைக்கு மேல் இருந்த பாரம் இறங்கியுள்ளதாக நிம்மதி அடைந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025