கல்கி விஜயகுமார் மற்றும் அவரின் மகன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!

கடந்த 16-ம் தேதி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் ஆந்திரா உட்பட இந்தியாவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த 40-க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 44 கோடி ரூபாய் பணமும் , 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி மற்றும் 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 85 ரூபாய் கோடி மதிப்பில் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை கல்கி விஜயகுமார் மற்றும் அவரின் மகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.