டெல்லியில் உள்ள நாங்லோங் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர் மனோஜ் ஷோகீன் தனது மருமகளை துப்பாக்கி முனையில் வன்கொடுமை செய்தாக மருமகள் புகார் செய்து உள்ளார்.
அந்த புகாரில் கடந்த ஆண்டு 2018-ம் டிசம்பர் 31-ம் தேதி புத்தாண்டு கொண்டாட கணவர் உட்பட குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்று உள்ளனர்.அப்போது புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த பிறகு தனது கணவர் நண்பர்களுடன் சென்றுவிட்டதாகவும் ,மது போதையில் இருந்த மனோஜ் ஷோகீன்.
துப்பாக்கி முனையில் தன்னிடம் தவறாக நடந்ததாகவும் , மறுத்தால் தனது சகோதரரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்த புகாரில் அவர் தெரிவித்தார்.அவரின் புகாரை தொடர்ந்து மனோஜ் ஷோகீன் மீது இந்திய தண்டனை சட்டம் 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.