கேரளாவில் இருந்து கர்நாடகா செல்ல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த கர்நாடகா அரசு…!

கர்நாடகாவுக்கு வரும் பயணிகள் கட்டாயமாக 72 மணி நேரத்திற்கு முன்பாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .அதன் அடிப்படையில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கர்நாடக அரசு கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கேரளாவில் இருந்து விமானம், பேருந்து, ரயில் மற்றும் டாக்ஸி மூலமாக கர்நாடகாவுக்கு வரும் பயணிகள் கட்டாயமாக 72 மணி நேரத்திற்கு முன்பாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025