டெல்லியில் இன்று 3,588 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.!

டெல்லியில் இன்று 1,947 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இன்று 1,947 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,92,560 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில், இன்று 3,588 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,63,938 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று 32 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,542 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 23,080 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.