அகில இந்தியவிவசாயிகள் சங்கத்தின்(AIKS) தலைமையில் கடன் தள்ளுபடி,விலை நிர்ணயம் மற்றும் வனச்சட்டம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் ஆதிவாசி உள்ளிட்டு 35,000 மக்கள் அனைவரும் பேரணியாக 200 கி.மீ கடந்து மும்பை நகரை வந்தடைந்தனர்.
இந்நிலையில் அதிகாலை தொழுகை முடிந்த கையோடு உழைத்து களைத்து போய் வெறும் காலோடும்,வெந்த புண்ணோடும் வரும் விவசாயிகளையும் ஆதிவாசிகளையும் ஆகாரம் கொடுத்து ஆசுவாசப்படுத்த காத்திருக்கும் எமது இஸ்லாமிய பெருமக்கள். அதேபோல் சீக்கியர்கள் குருத்வாராக்களில்,தலீத்கள் தத்தமது குடிசைகளில் இது போன்றே உபசரித்து உள்ளனர். மும்பை மத்திய தர வர்க்கம் தந்தமது காலனிகளில் குடியிருப்போர் நலசங்கங்கள் மூலமாக உதவிகளும் உபசரிப்பையும் செய்கின்றனர்.
unknown node#KisanLongMarch#AIKS#CPIM