ஜே.இ.இ, நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதே மாணவர்களின் விருப்பம் – ரமேஷ் பொக்ரியால்

Default Image

ஜே.இ.இ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்தது. பின்னர் முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர 7 மாநில அரசுகள் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சில மாநில முதல்வர்கள் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து தேர்வுகளை நடத்த எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், ஜே.இ.இ, நீட் தேர்வு தேதிகள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இறுதி செய்யப்பட்டுள்ளது. முழு கல்வியாண்டையும் வீணடிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீட் தேர்வுக்கு 7.5 லட்சம் பேரும், ஜேஇஇ-க்கு 10 லட்சம் பேரும் அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்த 8.58 லட்சம் மாணவர்களில் 7.5 லட்சம் பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர். 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாணவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதிகளவு மாணவர்கள் ஒரேநாளில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருப்பது, அவர்கள் தேர்வு எழுதுவதை விரும்புவதே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 06042025
War Mock Drill in India
BJP Lady Person murder in Pattukottai Tanjore district
MIGM Exp successfully tested by NAVY and DRDO
Vadakadu Riot - Pudukottai Police
SRHvDC - IPL2025
Hyderabad vs Delhi