இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு…! 4,106 பேர் உயிரிழப்பு….!

Default Image

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,81,386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,106 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,81,386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,106 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,49,65,463 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,74,390 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 3,78,741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,11,74,076 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35,16,997 ஆக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 3.26 லட்சம், நேற்று 3.11 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.81 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்