மே மாதம் வரை ஊரடங்கா?! வைரலான போலி செய்தி.! விளக்கம் கொடுத்த இந்திய அரசு.!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பொதுமக்களும் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

unknown node

இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது. அதில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது போல ஓர் அறிக்கை வெளியானது. அதில், இது முதற்கட்ட ஊரடங்கு அதன் பின்னர் சிறுது நாள் ஓய்வு விட்டு மீண்டும், மே மாதம் வரை ஊரடங்கு தொடரும் என போடப்பட்டிருந்தது.

இந்த போலி செய்தி இணையத்தில் தீயாய் பரவியது. பின்னர் இந்த செய்தி போலி என அரசு இணையதளத்தில் செய்தி வெளியான பின்னரே இதன் உண்மை தன்மை விளங்கியது. உண்மை செய்தியை விட போலி செய்திகள் மக்களிடம் விரைவாக சென்றடைகிறது என்பதற்கு இந்த போலி செய்தியும் உதாரணமாக அமைந்துவிட்டது.