பகலில் தொழிலதிபரை ஓட ஓட சுட்டு கொன்ற மர்ம நபர்..!பதைபதைக்கும் வீடியோ..!

Default Image

டெல்லி  காக்ரோல கிராமத்தைச் சேர்ந்த சொத்து வியாபாரி நரேந்தர் (45). நேற்று முன்தினம் துவாரகா பகுதியில் இவர் காரில் இருந்தார்.அப்போது பைக்கை  சற்று தூரத்தில் நிறுத்தி விட்டு. தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு நபர்கள் நரேந்தர் காருக்கு அருகில் வந்துள்ளனர்.

அப்போது நரேந்தர் காரில் இருந்து புறப்பட முயன்ற போது தலைக்கவசம் அணிந்து இருந்தவர்களில் ஒரு நபர் சரமாரியாக நரேந்தரை சுட்டுள்ளார். நரேந்தர் தப்பிக்க முயன்ற போது இன்னொரு கார் மீது ஏறி நின்று அந்த மர்ம நபர் அவரை துப்பாக்கியால்  சுட்டு  விட்டு ஓடிவிட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நரேந்திரரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நரேந்தரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நரேந்தர் மீது மோசடி , கொலை முயற்சி மற்றும் தாக்குதல் ஆகிய வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு சொத்து அல்லது பண தகராக என்ற அனைத்து  கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும்  சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay