பாதுகாப்புத் துறைக்கு ஒருமாதம் கால அவகாசம் – உச்சநீதிமன்றம் .!

Default Image

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக உயர் பதவி பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை செயல்படுத்த ஒரு மாதம் கால அவகாசம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பாதுகாப்பு அமைச்சகம் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த பிப்ரவரி மாத வழங்கப்பட்ட தீர்ப்பின் படி ராணுவத்தில் பெண்களுக்கும் உயர் பதவி வழங்கும் முடிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது கொரோனா காரணமாக அதை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், 6 மாதம் அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் வாதங்களை பதிவு செய்து கொண்டு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்