1988ஆம் ஆண்டு கணக்கு பாடம் ஏற்படுத்திய மனக்கசப்பில் பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்ட 50 வயதான எம்.எஸ்.லாகிண்டீவ் தற்போது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று மேற்கொண்டு கல்லூரி படிப்பை தொடர ஆசைப்படுவதாக தெரிவித்தார். மேகலயா மாநிலத்தில் 1988ஆம் ஆண்டு கணக்கு பாடம் கடினமாக இருந்ததால், எம்.எஸ்.லாகிண்டீவ் தனது பள்ளிப்படிப்பை நிறுத்தி கொண்டார். அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது மீண்டும் பள்ளி படிப்பை தொடர நினைத்து, ரி-போய் மாவட்டத்தில் உள்ள பலவன் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,842 பேருக்கு கொரோனா பாதிப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், இதுவரை 13,457,458 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 581,221 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 937,487 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24,315 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 593,080 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 2,496 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,077 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2,496பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,077 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 87 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 842 அதிகரித்துள்ளது. இந்நிலையில் காரோண தொற்று […]
2027-ல் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம். இந்தியாவை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. 2020-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 770 கோடியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், உலகளவில் சீனா 19 சதவிகிதமும், இந்தியா 18 சதவிகிதமும் மக்கள் தொகையை கொண்டுள்ள நிலையில், 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.இதனிடையே நேற்று சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிவிட்ட பதிவில் , 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் குழுமம் செவ்வாயன்று வால்மார்ட் தலைமையிலான முதலீட்டாளர் குழுவிலிருந்து 1.2 பில்லியன் டாலர் நிதியை பெற்றுள்ளது . கோவிட் -19 நெருக்கடியிலிருந்து இந்தியா வெளிவருவதால், அதன் இணையவழி சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சியை ஆதரிப்பதற்காக பிளிப்கார்ட் குழுமம் இன்று கூடுதல் 1.2 பில்லியன் முதலீட்டை அதன் முதன்மை பங்குதாரரான வால்மார்ட்டிடம் இருந்து பெற்றுள்ளது. 77% பங்குகளை வாங்கிய வால்மார்ட்: வால்மார்ட் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு பிளிப்கார்ட்டில் 77% பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு […]
ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் ஆந்திராவில் 36,221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 365 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 16,464 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுதிரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அந்த […]
கொரோனாவுக்கு அவசரகால மருந்தாக Itolizumab என்கிற மருந்தினை சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பயோகாம் லிமிடெட் என்கிற நிறுவனம் Itolizumab மருந்தினை 4 ஆராய்ச்சி மையங்களில் சுமார் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடுத்து அதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக பயோகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த Itolizumab மருந்தானது சொரியாசிஸ் பிரச்சனைக்கு கொடுக்கப்படும் மருந்தாகும். இந்த மருந்தை அவசர காலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த இந்திய மருத்துவ கட்டுப்பாடு […]
தங்கக்கடத்தில் வழக்கில் கைதான ஸ்வப்னாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி தூதரக முத்திரைகள், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னாவை […]
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 4,500 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை நெருங்குகிறது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இதுவரை இல்லாத அவளாக, இன்று ஒரே நாளில் 6,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,67,665 ஆக அதிகரித்துள்ளது. இன்று 213 பேர் […]
தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 1,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.15 லட்சமாக உயர்வு. டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,15,346 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,924 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை […]
இன்று ஒரே நாளில் கேரளாவில் 608 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 608 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 8,930 ஆக உயர்ந்துள்ளது. மறுத்தவமனையில் 4,454 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். இதுவரை 4,441 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இன்று 1 உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் […]
ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக சில பள்ளிகள், ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகள், நீண்ட நேரம் நடைபெற்று வருவதால், குழந்தைகளின் கண்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்து கொண்டே வந்தது. இந்த புகார்களை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. குழந்தைகளுக்கு 30 […]
வானம் முழுவதும் ஒரு வால்மீனைக் கண்டறிவது ஒரு கண்கவர்ந்த காட்சியாக இருக்கும். இன்று, சூரிய அஸ்தமனத்திலிருந்து தொடங்கி, வால்மீன் சி 2020 எஃப் 3 நியோவிஸ் அனைவருக்கும் தெரியும். மேலும் இந்த அரிய வால் நட்சத்திரம் இந்தியாவில் 20 நாட்களுக்குத் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தெளிவில்லாத வால்மீன் மங்கிவிடும் என்று கூறப்படுகிறது. NEOWISE வால்மீனில் 4 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பிரபஞ்சம் முழுவதும் அதன் பயணங்களிலிருந்து எடுக்கப்பட்ட இண்டர்கலெக்டிக் துகள்கள் இருப்பதாகவும், பூமிக்கு அதன் […]
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் டி.சி.எஸ் நிறுவனத்தில் இந்தியாவில் 40,000 புதியவர்களுக்கு பணியில் அமர்த்த டி.சி.எஸ் திட்டமிட்டுள்ளது. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்தில் 40,000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் நிறைய வேலைகளைச் செய்துள்ளது. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்தில் 40,000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வருவாய் கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று […]
ராஜஸ்தானில் நடக்கும் அரசியல் குழப்பங்களின் பின்னால் பாஜக இருக்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.கடந்த சில நாட்களாக முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.இதனால் 30 எம்.எல்.ஏ. ஆதரவு தனக்கு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் அறிவித்தார். எனவே நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.ஆனால் […]
2030-க்குள் இந்திய ரயில்வே பசுமை ரயில்வேயாக மாற்றப்படும். இந்திய ரயில்வே துறை, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ரயில்வே பாதைகளை மின்மயமாக்கல், ஆற்றலை சேமிக்கும் வகையில் ரயில் எஞ்சின்களையும், பெட்டிகளையும் மேம்படுத்துதல், ரயில் பெட்டிகளில் உயிரி – கழிவறைகளைப் பொருத்துதல், புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களுக்கு மாறுதல் மற்றும் கரிமில வாயுவை முற்றிலும் வெளியிடாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வேத் துறை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தற்போது, இந்திய ரயில்வேத் துறை, 2030 ஆம் […]
மேற்கு வங்கத்தின் துணை பெண் நடுவராகிய (deputy magistrate)டெபட்டா கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்ததற்கு, கொரோனவை எதிர்கொண்ட முதல் போராளி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகழாரத்துடன் இரங்கல். உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், மேற்கு வங்கத்தின் துணை நடுவராகிய (deputy magistrate) டெபட்டா மற்றும் அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். தற்பொழுது அவரது […]
துணை முதலமைச்சர் பதவியில் இருந்து சச்சின் பைலட்டை நீக்க ராஜஸ்தான் ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ராஜஸ்தானில் காங்கிராஸ் அரசை தக்க வைக்க முதலமைச்சர் அசோக் கெலாட் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அந்த வகையில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது .ஆனால் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. இதனால் இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.மேலும் அவரை […]
சத்தியத்தை தோற்கடிக்க முடியாது என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், 30 எம்.எல்.ஏ. தனக்கு ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என சச்சின் பைலட் அறிவித்தார். இதற்குடையில் சச்சின் பைலட்டுக்கு நடைபெற்ற எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சச்சின் பைலட் அறிவித்தார்.எனவே […]