நள்ளிரவுக்குள் ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்படும் – மத்திய நிதியமைச்சர்அறிவிப்பு..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் காணொளி மூலம் நடைபெறும். இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நள்ளிரவுக்குள் நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றார்.