அருணாச்சலத்தில் பாஜக முன்னிலையில், சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம்-சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

டெல்லி:அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 19 அன்று 60 பேரவைத் தொகுதிகள் உள்ள அருணாச்சல் பிரதேசம் மற்றும் 32 தொகுதிகள் உள்ள சிக்கிம் ஆகிய இடங்களில் மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்துடன் இணைந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆரம்பகால முடிவுகளின் படி, அருணாச்சல் பிரதேசத்தில் பாஜக 60 இடங்களில் 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, இதில் அந்த கட்சி ஏற்கெனவே 10 இடங்களை போட்டியின்றி வென்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி (NPP) மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கின்றது, மற்ற கட்சிகள் இரு இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
மற்றுமொரு புறம், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா (SKM) 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது, சிக்கிம் ஜனநாயக முன்னணி (SDF) மற்றும் பாஜக தலா ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025