மந்திரவாதியால் தாக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

Default Image

தெலுங்கானா மாநிலத்தில் மந்திரவாதியால் தாக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர்.

தெலுங்கானா மாநிலத்தில் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஜிதா இந்தப்பெண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மல்லேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்கள் இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் குழந்தை ஒன்று பிறந்தது, மேலும் இந்நிலையில் ரஜிதாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது, இதனால் அவரது கணவர் மல்லேஷ் தனது மனைவி ரஜிதாவிற்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்துள்ளார்.

மேலும் இந்த நிலையில் கணவர் மல்லேஷ் உள்ளூர் மந்திரவாதி ஷியாம் என்பவரை அழைத்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த மந்திரவாதி பேய் ஓட்டுவதாக கூறி ராஜிதாவின் தலைமுடியைப் பிடித்து கன்னத்தில் அறைந்து, மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார் அப்போது அங்கு உள்ள சுவற்றில் ரஜிதாவின் தலை இடித்ததால் மயங்கி விழுந்தார்.

மயங்கி விழுந்ததும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் , இந்த நிலையில் இதனை தொடர்ந்து மந்திரவாதி ஷியாம் மற்றும் ரஜிதாவின் உறவினர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர் , மேலும் தலைமறைவாக ராஜிதாவின் கணவர் மல்லேஷ் மற்றும் அவரது பெற்றோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts