கேரளாவில் ஏற்பட்ட பதற்றம் ...!சபரிமலையில் நாளை வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு ...!

கேரளாவில் சபரிமலையை ஒட்டிய பம்பை, நிலக்கல்,சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் நாளை வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநில சபரிமலை ஐயப்பன்

கேரளாவில் சபரிமலையை ஒட்டிய பம்பை, நிலக்கல்,சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் நாளை வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறுவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுவருகிறது.இந்நிலையில் இன்று கோயில் நடைதிறக்கும் நிலையில்,கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.அதேபோல் ஏராளமானபெண் போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.ஆனால் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களையும் வர விடாமல் போராட்டகாரர்கள் தடுத்தார்கள்.

unknown node

அது மட்டும் அல்லாமல் சபரிமலையில் அருகே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரின் காரை மறித்து போராட்டக்காரர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினார்கள்.இந்நிலையில் 144 தடை உத்தரவு தொடர்பாக பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பம்பை, நிலக்கல்,சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் நாளை வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.அதேபோல்  சபரிமலை பகுதிகளில் வன்முறை நடைபெறாமல் தடுக்கவே 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று த்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ்  தெரிவித்துள்ளார்.