தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி எதிரொலி! காஷ்மீரில் 8 பேரும் தமிழகத்தில் ஒருவரும் பிடிபட்டனர்!

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ள்ளதாக ராணுவ கமாண்டோ எஸ்.கே.சைனி நேற்று எச்சரிக்கை தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து வெளியான தகவலின் படி, ‘ குஜராத் சர் க்ரீக் எனும் கடற்கடையில் கேட்பாடடற்று சில படகுகள் இருப்பதாகவும், அந்த படகுகள் மூலமாக பயங்கரவாதிகள் உட்புகுந்துள்ளார்களா எனவும் தீவிர சோதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது, ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஸ் இயக்கத்தை சேர்ந்த அசாதுல்லா ஷேக் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதே போல லஷ்கர் – இ – தொய்பா அமைப்பை சேர்ந்த 8 பேர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர்.