தாய்லாந்தில் பலியான இந்திய பெண் என்ஜினீயர்..! பாஸ்போர்ட் இல்லாததால் தவிக்கும் குடும்பம்..!

மத்திய பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தை சார்ந்தவர் பிரக்யா பலிவால் (29).இவர் சாப்ட்வேர் இன்ஜினீயாராக பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் தாய்லாந்தில் உள்ள புக்கட்டில் நடைபெறும்.
இதற்காக பிரக்யா சென்றிருந்தார். இவருடன் இன்னும் சில பேர் சென்று இருந்தனர். அங்கு நடந்த கார் விபத்தில் பிரக்யா பலியானார். இவரின் உடலை புக்கட்டில் உள்ள படாங் மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இவரது தோழிகள் பிரக்யா பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பிரக்யா குடும்பத்தில் உள்ளவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால் தாய்லாந்து சென்று மகளை எப்படி பெறுவது என தவித்தனர். இதையடுத்து அந்த தொகுதி எம்.எல்.ஏ அலோக் சதுர்வேதி உதவி நாடினர்.
அவர் உடனடியாக முதலமைச்சர் கமல்நாத் இடம் கூறினார். முதலமைச்சர் கமல்நாத் அனைத்து உதவியும் செய்து தருவதாக கூறி மத்திய அரசுக்கு தகவல் கூறினார். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் , பாங்காங்கில் உள்ள இந்தியத் தூதரகம் பிரக்யா உடலை இந்தியா கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025