இமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைய டொனால்ட் ட்ரம்ப்,அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் போலி ‘இ-பாஸ்கள்’ பெற்ற நபர்..!

இமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைய டொனால்ட் ட்ரம்ப்,அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் போலி ‘இ-பாஸ்கள்’ பெற்ற நபரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால் பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.மேலும்,பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடந்து,இமாச்சலப் பிரதேசமும் தங்கள் மாநிலத்திற்குள் வருபதற்கு ‘இ-பாஸ்’ முறையை கட்டாயமாக்கியுள்ளது.மேலும்,பிற மாநிலத்திலிருந்து வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே ‘இ-பாஸ்’ அனுமதி என்றும்,அதன்படி வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவர் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் ‘இ-பாஸ்கள்’ பெறப்பட்டுள்ளன.
இதுத்தொடர்பாக,இமாச்சலப் பிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை அளித்த புகாரின் அடிப்படையில் சிம்லா கிழக்கு காவல் நிலைய போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் விதிகளின் கீழ்,முக்கிய பிரபலங்களின் பெயர்களில் ‘இ-பாஸ்களை’ பெற்ற சம்மந்தப்பட்ட நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
HP Police is in receipt of a complaint regarding fake registration in the name of Mr. Donald Trump and Mr. Amitabh Bachchan in the Covid e-pass platform. Shimla Police is registering a FIR under relevant sections of IPC and IT Act for further legal action.@CMOHimachal
— Himachal Pradesh Police (@himachalpolice) May 7, 2021
இதுகுறித்து சிம்லா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”மே 7ஆம் தேதியன்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் ‘ஹெச்பி -2563825’ மற்றும் ‘ஹெச்பி -2563287′ என்ற இரண்டு இ-பாஸ்கள்’ பெறப்பட்டுள்ளன. ஆனால்,இந்த இரு இ-பாஸ்களும் ஒரே மொபைல் நம்பர் மற்றும் ஒரே ஆதார் எண் மூலம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து,சம்பந்தப்பட்ட நபரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்”,என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025