மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 17 வயது பெண்ணை மயக்க மாத்திரை கொடுத்து அரசு மருத்துவ ஊழியர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
unknown nodeஉத்திர பிரதேச மாநிலத்தில் ஹதீராசில் எனும் ஊரில், உள்ள அரசு டிபி மருத்துவமனையில், சிகிச்சைக்காக ஒரு 17 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டார். அப்போது சம்பவம் நடைபெற்ற 23ஆம் தேதி, இரவில் மருத்துவமனை ஊழியர் ஒருவர், அந்த சிறுமியை அழைத்து ஊசி போட வேண்டும் என கூறி, கிழே உள்ள அறைக்கு அழைத்துள்ளார். அவர் தனது தாயை அழைக்க முயன்றுள்ளார். அதற்கு அந்த ஊழியர், ‘ அவர் தூங்கட்டும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்.’ என கூறி அந்த சிறுமியை கீழ் உள்ள அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
unknown nodeஅங்கு அவருக்கு மயக்க மாத்திரை கொடுத்து, சிவானந்தன், விஷால் எனும் இரு ஊழியர்களும் அந்த சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த சிறுமிக்கு இந்த விஷயம் பின்னர் தெரிந்து, தான், தாயிடம் கூறி அந்த சிறுமிக்கு மருத்துவ சோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொடுமையான செயலை இரு ஊழியர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.