ஆக்ராவின் ரைபா கிராமத்தை சார்ந்த ஷியாம் ஷிகார்வர் (22).இவர் தனது முக நூலில் நேரலையில் வந்தார். நேரலையை ஷியாம் நண்பர்கள் பார்த்து கொண்டு இருந்தார்கள். அப்போது பேசிய ஷியாம் நான் தற்கொலை செய்ய போகிறேன் எனது தற்கொலை தொடர்பாக எனது பெற்றோர்களை கைது செய்யக்கூடாது.
நான் இறந்த பிறகு எனது புகைப்படங்களை முக நூலில் பதிவிட வேண்டும் என கூறினார். இதை நேரலையில் பார்த்து கொண்டு இருந்த அவரது நண்பர்கள் உடனடியாக ஷியாம் குடும்பத்திற்கு தகவல்கள் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு ஷியாம் குடும்பத்தினர் விரைந்து சென்றனர்.ஆனால் அவர்கள் வருவதற்குள் கோவில் வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
unknown nodeசம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷியாம் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.அந்த கடிதத்தில் ” நான் என் காதலியை பிரிந்து வாழ்ந்து வருகிறேன்.அவளை பிரிந்து என்னால் வாழ முடியாது.அவள் வேறு ஒருவரை திருமணம் செய்ய போகிறாள் அதை என்னால் தாங்க முடியவில்லை .
அதனால் நான் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு உள்ளேன்.மேலும் எனது வேலையையும் நான் இழந்து விட்டேன் என அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது. ஷியாம் தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.