மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடத்திவரப்பட்ட 10 டன் போதை பொருட்களை மத்திய வருவாய் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் வாயிலாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் போதை பொருள் கடத்த முயற்சிப்பதும், அதனை அதிகாரிகள் பிடிப்பதும் அண்மைக்காலமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அதே போல , தற்போதும் இந்திய துறைமுகத்தில் டன் கணக்கில் போதை பொருள் சிக்கியுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக, மலேசியாவில் இருந்து 10 டன் போதைபொருள்கள் கடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் மதிப்பு 1.75 கோடியாகும்.
இதனை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து, போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இது குறித்து, இதனை இறக்குமதி செய்த ஷிப்பிங் கம்பெனி மீதும் , அவை யார் மூலம் இங்கு வந்தது எனவும் விசாரணை செய்து வருகின்றனர்.