தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என மாற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிறந்து தமிழகத்தில் முடியும் என்ற பெருமை கொண்ட ஆறு தாமிரபரணி ஆறு. இந்த தாமிரபரணி ஆற்றின் பெயரை மாற்ற கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்பாட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தாமிரபரணி எனும் சொல் வடமொழி சொல் எனவும், பொருநை நதி என்ற பெயர் தான் சங்ககால இலக்கியத்தில் உள்ளது. ஆதலால் பொருநை நதி என அதன் பெயர் மாற்ற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து 12 வாரங்களில் உரிய முடிவு எடுத்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டு வழக்கை தள்ளிவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.