அண்ணாமலைக்கு அகரம் தெரியாது..! ஆனால் சிகரம் தெரிந்த வைகோ சீறியிருக்க வேண்டாமா…? – அண்ணாமலை

Published by
லீனா

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘ இலங்கை தமிழர், காவிரி நதிநீர், மீனவர் இன்னல், என பல பிரச்சனைகளுக்கு எழுச்சி உரை நிகழ்த்தி போராட்டம் நடத்திய திரு.வைகோ முல்லைப் பெரியாறு அணையை திமுக அரசு கேரளாவிற்கு தாரை வார்த்து, அணையின் மதகுகளை கேரளா அமைச்சர் திறந்தபொழுது, தமிழக விவசாயிகள் துடிதுடித்துப் போனார்களே, அப்போது துடிப்புடன் துயர்துடைக்க, வைகோ போராட வருவார்… வருவார்…. என்று எண்ணி விவசாயிகள் காத்திருந்தார்கள்.

முல்லைப்பெரியாறு அணைக்கு நான் நான்கு முறை போராட்டம் நடத்திவிட்டேன் அது முடிந்து போன பிரச்சனை என்று தன் அறிக்கையில் முழங்கி இருக்கிறார் வைகோ, ஆனால் இப்போது திமுகவின் அக்கறையின்மையால், ஆளுமைக்குறைவால் புதிதாக உருவான பிரச்சனையை, விவசாயிகளின் தவிப்பை அவர் கண்டு கொள்ளவே இல்லை என்று பாஜக தேனி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஆதங்கப்பட்டார்கள். மக்களுக்கு ஆதரவான எங்கள் போராட்டத்திற்கு ஆதரவுக் கரம் வேண்டிதானே விவசாயிகள் சார்பில் அவர்கள் ஆதங்கம் தீர்க்க ஐயா வைகோ அவர்களுக்கு தேனி ஆர்ப்பாட்டத்தில் அழைப்பு விடுத்தேன்.

வெறும் போலீஸ்தானே என்று என்னை இடித்துரைப்பதாக நினைத்து, ஒட்டு மொத்த காவல்துறையையே இழிவுபடுத்தியிருக்கிறார் திரு.வைகோ. போராட்டம் முடிந்த நான்கு நாட்களுக்குப் பிறகு மெதுவாக வாய் திறப்பது…. அவருக்கு பாஜகவின் போராட்டத்தால், விவசாயிகளால் ஏற்பட்ட அழுத்தத்தாலா? அல்லது ஆளும்கட்சிக்கு ஒத்து ஊதும் அரசியலா?

இந்த உங்கள் அறிக்கையில் கூட முல்லைப்பெரியாறு அணையை கேரளாவிற்கு தாரை வார்த்த திமுக அரசிற்கு ஒற்றைக் கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே ஏன்? வைகோ அவர்களே. வாரிசு அரசியலை எதிர்த்து வாள் வீசி, பின்பு அக்கட்சியிலேயே வாரிசுக்கு சாமரம் வீசி, தங்கள் கட்சியிலும் வாரிசை ஐக்கியமாக்கி, வாரிசு அரசியலுக்கு வாக்குப்பட்ட உங்களைப்பற்றி பேச பாஜகவிற்கோ, எனக்கோ அருகதை இல்லை என்பது உண்மைதான் வைகோ அவர்களே.

முல்லைப் பெரியாறு பற்றி அகரம் தெரியாத அண்ணாமலை உங்கள் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று அறிவித்துள்ளீர்கள், நன்றி, ஆனால் அதன் சிகரம் தெரிந்த நீங்கள் சீறியிருக்க வேண்டாமா? மக்கள் பிரச்சனைக்காக, விவசாயிகளுக்காக நான் போராடும் போது அதை தள்ளி நின்று எள்ளி நகையாடுவது யாரைத் திருப்திபடுத்த.

காலம் காலமாக தமிழகத்தில் போராட்டத்திற்கு மட்டும் பயன்பட்ட காவிரி நதிநீர் பிரச்சனைக்கும், மீனவர் பிரச்சனைக்கும் தீர்வுகண்ட கட்சி பாஜக தான். ஆகவே முல்லைப்பெரியாறு அணை குறித்து போராடவும், பேசவும், முழு உரிமையும், முழுத் தகுதியும் உள்ள ஒரே கட்சி பாஜக என்பதை மக்கள் அறிவார்கள்.’ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

6 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

7 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

8 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

8 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

9 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

9 hours ago