annamalai said that BJP will contest 20 constituencies [file image]
BJP: நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது.
கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி 39 தொகுதிகளுக்கும் பங்கீடு முடிவடைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். அதேசமயம், பாஜகவின் தாமரை சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேலும் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
இதனால், மொத்தம் 24 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்பட்டியல் உடன் தலைவர்கள் இன்று டெல்லி செல்ல இருக்கிறோம். எனவே, இன்று மாலையில் இருந்து எந்த நேரத்திலும் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்பதை எதிர்பார்க்கலாம். இதுபோன்று கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அவர்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவார்கள்.
பாஜக என்பது ஒரு தேசிய கட்சி. ஒரு மாநில தலைவர் இங்கிருந்து வேட்பாளர்களை அறிவிப்பது நம்புடைய கட்சியின் வழக்கம் இல்லை. கூட்டணி வேட்பாளர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் தலைமைக்கு அனுப்பிவிட்டோம். இதனால் முறைப்படி, கட்சி தலைமை அறிவிக்கும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் கூறியதாவது, எங்கள் கூட்டணியில், சுமுகமாக, மகிழ்ச்சியாக, திருப்திகரமாக எல்லோருக்கும் என்ன வேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. எல்லோரும் வளர வேண்டும் என்ற அடிப்படையில்கூட்டணியின் பங்கீடு முடிந்திருக்கிறது.
தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு மாறுபட்ட அரசியலை பாஜக முன்னெடுத்து வருகிறது. அதற்கான ஒரு பெரிய முயற்சி தான் இந்த 2024 மக்களவைத் தேர்தல். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப் பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும், தமாகா, ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தை குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, தமாகா 3 இடங்களில் போட்டியிடுகின்றனர்.
ஓபிஎஸ் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது, அவரே விரைவில் அறிவிப்பார் எனவும் கூறினார். எனவே தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில், பாஜக 20, பாமக 10, அமமுக 2, ஐஜேகே 1, புதிய நீதிக்கட்சி 1, தமாகா 3, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் 1, தமமுக 1 என வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…