#BREAKING: ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 4 அவதூறு வழக்குகள் ரத்து..!

Twelve defamation cases against Stalin, the late former chief minister Jayalalithaa, came up for hearing today.

ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 4 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 12 அவதூறு வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுப்பது தொடர்பாகவும் விமர்சித்த தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அப்போது, நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டு 4 வழக்குகளை ரத்து செய்தது. மேலும், மீதம்முள்ள 8 வழக்கு விசாரணை வருகின்ற திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, வலுவில்லாத ஆதாரங்களுடன் அவதூறு வழக்குகள் தொடர்வதை நிறுத்த வேண்டும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களை எதிர் கொள்ளும் சகிப்புத் தன்மை வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கட்சி தலைவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.