#BREAKING: அரசு நிலத்தில் சிலைகள் அமைக்கக்கூடாது – உயர்நீதிமன்றம்

The High Court has directed that action be taken to prevent the erection of idols without permission in future.

எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள், அவர்களை அவமரியாதை செய்யவில்லை. எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அணையிட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பான உத்தரவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பி, தமிழக அரசு, தலைமை செயலாளர் 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.