செம்பரபாக்கம் செல்கிறார் முதல்வர் பழனிசாமி.!

Chief Minister Edappadi Palanisamy is reviewing the precautionary measures as Sembarambakkam is expected to open soon

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்க பட உள்ள நிலையில் நேரில் ஆய்வு செய்ய உள்ளார் முதல்வர் பழனிசாமி.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், சென்னையில், செம்பரப்பாக்கம் ஏரியில், 1000 கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால், இருபுறமும் உள்ள தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சற்று நேரத்தில் செம்பரம்பாக்கம் திறக்கப்பட இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார். மேலும், பிற்பகல் 12 மணி அளவில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.