பிரசவத்திற்காக மருத்துவமனை சென்று கொரோனா தொற்றுக்கு உள்ளான இளம்பெண்.!

பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு வந்திருந்த இளம்பெண்ணிற்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தேனி மாவட்டத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு தேனி சென்றுவிட்டார். பின்னர் பிரசவத்திற்காக மீண்டும் வால்பாறை வந்துள்ளார். அங்கு உறவினர் வீட்டில் வசித்து வந்த அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, உடனே பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அவருக்கு குழந்தையும் பிறந்தது. மருத்துவமனையில் அதே நேரத்தில் பிரசவித்த ஒரு இளம் பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால், பொள்ளாச்சி மருத்துவமனைக்கு வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், பிரசவத்திற்காக மருத்துவமனை வந்திருந்த வால்பாறையை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனால், அந்த இளம்பெண்ணை பார்க்க வந்த உறவினர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இளம்பெண்ணிற்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025