தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிப்பு – இன்று முதல் இதற்கெல்லாம் அனுமதி!

The Chief Minister of Tamil Nadu has extended the curfew for another 2 weeks in view of the spread of corona infection in Tamil Nadu.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவு.

தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும், சிலவற்றிற்கு இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

ஊரடங்கு நீட்டிப்பு – இவற்றுக்கெல்லாம் இன்று முதல் செயல்பட அனுமதி:

நீண்ட மாதங்களாக மூடப்பட்டியிருந்த திரையரங்குகள் திறக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் கோரிக்கை முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்த நிலையில்,  நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் இன்று முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்ட்டுள்ளது. திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை இரவு 09.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் இன்று முதல் இரவு 10.00 மணி வரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.

தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இப்பகுதிகளில், பணியாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி/மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் (FL 2. FL 3) செயல்பட அனுமதிக்கப்படும்.

நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சியாளர்களுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயக்க அனுமதிக்கப்ட்டுள்ளது.

unknown node