சென்னை:தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இன்று (அக்டோபர் 15, 2025) சென்னை சந்தையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.11,860-ஆகவும், சவரனுக்கு (8 கிராம்) ரூ.280 உயர்ந்து – ரூ.94,880-ஆகவும் விற்பனையாகிறது. சவரன் விலை ரூ.95,000-ஐ நெருங்கியுள்ளது, இது வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது.
தங்கம் விலையை போல வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.1 ஏற்றம் – ரூ.207, கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.2,07,000.இந்தத் தொடர் ஏற்றம், இல்லத்தரசிகளையும், சுப நிகழ்ச்சிகளுக்குத் தயாராகும் குடும்பங்களையும் பெரிதும் பாதித்துள்ளது. திருமணங்கள், பிறந்த நாள்கள் போன்றவற்றுக்கு தங்க நகைகள் தேவைப்படும் போது, விலை இறக்கம் எப்போது வரும் என்று அவர்கள் காத்திருக்கின்றனர்.
கடந்த நாட்களில், தங்க விலை சீராக உயர்ந்து, நேற்று முன்தினம் கிராம் ரூ.11,580 (சவரன் ரூ.92,640) இருந்தது நேற்று கிராம் ரூ.11,825 (சவரன் ரூ.94,600) ஆனது. இன்றைய உயர்வு, உலக சந்தை அழுத்தங்கள் மற்றும் இந்தியாவில் திருமண சீசன் காரணமாக ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வெள்ளி விலையும் தங்கத்தைப் போலவே ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று முன்தினம் கிராம் ரூ.197 (கிலோ ரூ.1,97,000) இருந்தது நேற்று கிராம் ரூ.206 (கிலோ ரூ.2,06,000) ஆனது. இன்று கிலோ ரூ.2,07,000-ஐ தாண்டியது, முதல் முறையாக ரூ.2 லட்சத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்கள், “இந்த ஏற்றம் தற்காலிகம், ஆனால் பண்டிகைக்குப் பின் இறக்கம் வரலாம்” என்று அறிவுறுத்துகின்றனர்.
கடைசி 5 நாட்களின் விலை நிலவரம்: தங்கம் (22 கேரட் சவரன்):
14.10.2025: ரூ.94,60013.10.2025: ரூ.92,64012.10.2025: ரூ.92,00011.10.2025: ரூ.92,00010.10.2025: ரூ.91,720
வெள்ளி (கிராம்)
14.10.2025: ரூ.20613.10.2025: ரூ.19712.10.2025: ரூ.19011.10.2025: ரூ.19010.10.2025: ரூ.184
