திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய சதீஷ் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சவுந்தரராஜன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3-ம் தேதி பிராட்வே பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தண்ணீர் கேன்களை கொண்டுவந்தபோது, அங்கு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் சவுந்தராஜனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
இதன்பின் பிராட்வே பேருந்து நிலையத்தில் சவுந்தராஜன் கொல்லப்பட்ட வழக்கில் வசந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், திமுக பிரமுகர் சவுந்தரராஜன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பதுங்கிருந்த அதிமுக பிரமுகர் கணேசனின் மற்றொரு மகனான வழக்கறிஞர் சதிஷ் காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.
ஏற்கனவே, நேற்று இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் கணேசன், அவரது மகன் தினேஷ் குமார் உள்ளிட்ட 5 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைதானார். சினிமா பாணியில் சுவர் விளம்பரத்துக்கு நடந்த மோதலில் திமுக பிரமுகர் சவுந்தராஜன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…