மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன் .ராதா கிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.
unknown nodeஇந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வசந்தகுமார் சந்தித்தார்.அதன் பின்னர் அவர் கூறுகையில், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளேன். கன்னியாகுமரி மக்களவை பதவியை தக்க வைத்துக்கொண்டு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார்.
தற்போது 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் எம்எல்ஏக்கள் பலம் 110 ஆக உள்ளது.மேலும் அதிமுகவுக்கு 123 எம்எல்ஏக்கள் உள்ளனர்(அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சேர்த்து).எம்எல்ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்வதால் நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது .வசந்தகுமார் ராஜினாமாவால் சட்டப்பேரவையில் திமுக அணியின் பலம் 109ஆக குறைகிறது.