தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக பட்ச இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும் என்றும், தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் எனவும், தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஹாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.