முட்டை விலை 20 காசுகள் உயர்வு...!

In the Namakkal region, the farm purchase price of an egg has risen by 20 paise to 4.40 paise today.

நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து 4.40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.

இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மண்டலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமானதால் முட்டை உற்பத்தி 10% குறைந்ததால் முட்டை விலை இன்று அதிகரித்துள்ளது.

அதன் படி, நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து 4.40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதைபோல் சென்னையில் 25 காசு அதிகரித்து 4.65 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.