மீனவர்கள் 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி ! முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

மீன்பிடிக்கும்போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்த ராமேஸ்வரம், கன்னியாகுமாரி மீனவர்கள் 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை – 21.9.2019 pic.twitter.com/wY7palCsqV
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 21, 2019
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது ,படகு கவிழ்ந்து உயிரிழந்த செல்வமணி,கோவிந்தராஜ் ,சிந்தாஸ்,மினோன்,சகாயம்,லூர்துராஜ்,அருளிஸ் ஆகிய 7 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன்.இவ்வாறு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.இந்த மீனவர்கள் 7 பெரும் நாகப்பட்டினம், ராமேஸ்வரம், கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025