குறைந்து எகிறும் தங்கம் விலை! இன்று சவரனுக்கு ரூ.1,600 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold rate news

சென்னை :இன்று (நவம்பர் 13, 2025) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.11,800-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சவரன் ரூ.92,800-ஆக இருந்த நிலையில், இன்றைய உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதேபோல் 18 காரட் தங்கமும் கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ரூ.9,850-க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.78,800-க்கும் விற்பனையாகிறது.நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நவம்பர் 12-ஆம் தேதி கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,600-ஆகவும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800-ஆகவும் இருந்தது.

இந்தக் குறைவு நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று திடீரென ரூ.1,600 உயர்வு ஏற்பட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.வெள்ளியின் விலையும் இன்று பெரிய உயர்வைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்து ரூ.182-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,82,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலை சீராக இருந்த நிலையில் இன்றைய உயர்வு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, டாலர் மதிப்பு, பொருளாதார நிலவரங்கள் ஆகியவை இந்தியாவில் தங்க விலையைப் பாதிக்கின்றன. திருமண சீசன், பண்டிகை காலத்தையொட்டி தங்க நகை வாங்குவோர் இந்த உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை மேலும் உயர வாய்ப்புள்ளதால், வாங்குவோர் விலை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று வியாபாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.