எஸ்எஸ்ஐ வில்சனின் மூத்த மகளுக்கு அரசு வேலை.!

கன்னியாக்குமரி மாவட்டம் காளியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சன் மூத்த  மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது.வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் பணி

கன்னியாக்குமரி மாவட்டம் காளியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சன் மூத்த  மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது.வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில்  இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் போலீசார் கைது செய்தனர்.

இதையெடுத்து வில்சன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி  நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு பின்னர்  முதல்வர் பழனிசாமி ரூ.1 கோடியை வில்சனின் மனைவி மற்றும் 2 மகள்களிடம் தலைமைச்செயலகத்தில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.