பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

அமைச்சர் பொன்முடி தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் காவல்துறை வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ponmudi - highcourt

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்) பாராட்டி நடத்திய கூட்டத்தில் பேசிய பொன்முடி,” வைணவம் மற்றும் சைவம் குறித்து சமீபத்தில் பாலியல் ரீதியாக அவதூறாகப் பேசியதால் சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது, மேலும் இதுவரை காவல்துறை வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அமைச்சராக இருப்பவர் கீழ்த்தரமாக பேசலாமா? இதுபோன்று மற்றவர்கள் பேசியிருந்தால் போலீஸ் அமைதியாக இருந்து இருக்குமா? பொன்முடி பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளதால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என்றும் அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும், இல்லாவிட்டாலும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பியது.

மேலும், கடந்த ஏப்.12ம் தேதி பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட புகார் மீது தற்போது வரை வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?அமைச்சரின் அவதூறு பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. வரும் 23ம் தேதி வழக்கின் அடுத்த விசாரணைக்குள் பொன்முடிக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்