நான் சர்கார் திரைப்படத்தை பார்க்காததால், அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,நான் சர்கார் திரைப்படத்தை பார்க்காததால், அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது.அதேபோல் திரைப்படத்தில் பொய்யான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டியும்தான் இன்றைய நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஆகும் . இதனால் பாதிக்கப்பட்டது சுரண்டல்காரர்கள், பதுக்கல்காரர்கள், தீவிர வாதிகள் போன்ற சமூக விரோதிகள்தான் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.