சென்னையில் பெரியார் சிலையை அவமதித்தவர் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
unknown nodeதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், பெரியார் சிந்தனைக்கு எதிராக ஏராளமான இயக்கங்கள் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த விவகாரத்தை வைத்து பல்வேறு கட்சிகள் அரசியல் செய்வதாக அவர் விமர்சனம் செய்தார்.
DINASUVADU