மதுரையில் போராடியவர்களை வழக்கிலிருந்து விடுவித்தது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்.
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடந்த 2017-ஆம் ஆண்டு ரயில் மறியலில் ஈடுபட்டு கைதான 24 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக கைதானவர்களை விடுவிக்க மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த 2017ல் போராட்டங்கள் வெடித்தன. அந்த சமயத்தில், மதுரை செல்லூர் ரயில் மேம்பாலத்தில் ரயிலை நிறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதில் 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இவர்களை விடுதல் செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்.