#JustNow: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. 3 மாணவர்கள் முறைகேடு!

12-ம் வகுப்பு ஆங்கில பாட தேர்வில் 3 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்.
தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 5ம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு ஆங்கில பாட தேர்வில் 3 மாணவர்கள் முறைகேடு ஈடுபட்டதாக பிடிபட்டுள்ளனர் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என்று 3 பேர் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு பிடிபட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பு அரசு தேர்வுகள் இயக்ககம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி மற்றும் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்றும் பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025