வெற்றி பெற்றதை அதிகாரிகள் அறிவிக்கவில்லை என கூறி வாக்கு எண்ணும் மையம் முன்பு சாலை மறியல்.
அப்போது இருதரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் 97 ஆயிரத்து 975 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீதமும் , இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகியது.
இதை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் வெற்றி பெற்றதை அதிகாரிகள் அறிவிக்கவில்லை என கூறி வேட்பாளர் தவமணி உறவினர்களுடன் வாக்கு எண்ணும் மையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டார்.அப்போது இவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
unknown nodeவாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டு உள்ளனர்.இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். தடியடி சம்பவத்திற்கு பின்னர் வேட்பாளர் தவமணி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.